பிரதான செய்திகள்

ஞாயிற்றுக்கிழமை (02) பாராளுமன்றம் கூடாது!

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தை நாளை (01) நடத்த கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

நாளை காலை 9.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை இந்த விவாதம் நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்றத்தை கூட்டாமல் இருப்பதற்கும் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

எதிர்கால பாராளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கட்சித் தலைவர்கள் அடங்கிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு  இன்று (30) பிற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

இதன்போது குறித்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் எதிர்வரும் 4 ஆம் திகதி செவ்வாய்கிழமை பாராளுமன்றக் கூட்டங்கள் இடம்பெறாது எனவும், எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

முஹம்மது நபியை இழிபடுத்திய பத்திரிக்கையை கண்டித்து முஸ்லிம்கள் போராட்டம் (விடியோ)

wpengine

கிளிநொச்சிக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, புகையிரத நிலையத்துக்கு விஜயம்.

Maash

மலேசியா கோலாலம்பூர் பல்கலைக்கழகத்திற்கும் மட்டக்களப்பு கெம்பஸுக்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்து.

wpengine