பிரதான செய்திகள்

முதியவரின் முகக் கவசத்தில் ஒழிந்த பீடி! முதியவரின் இச்செயற்பாட்டை பார்த்து சிரித்த பொலிஸார்.

பீடியொன்றை பற்றவைத்தவாறு சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த முதியவர் ஒருவர், வீதியில் பொலிஸாரைக் கண்டவுடன், வாயில் வைத்திருந்த பீடியுடன் முகக் கவசத்தை அணிய முற்படுகையில் பொலிஸாரால் தடுக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று முன்தினம் (11) கிரிஉல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

முகக் கவசங்களை அணியாதவர்களை கைதுசெய்வதற்கான பணியில், கிரிஉல்ல பொலிஸார் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, கொழும்பு- குருநாகல் பிரதான வீதியில், நபரொருவர் சைக்கிளை நிறுத்தி அவசரஅவசரமாக முகக் கவசத்தை அணிவதை பொலிஸார் கண்டுள்ளதுடன்,அந்த முகக் கவசம் தீப்பற்றுவதையும் அவதானித்து கூக்குரலிட்டு முகக் கவசம் அணிவதை தடுத்துள்ளனர்.

பொலிஸாரைக் கண்ட பதற்றத்தில் வாயில் பீடி இருப்பதை மறந்து தான் முகக் கவசத்தை அணிந்து கொண்டதாகவும் முகக்கவசத்தை அணியாமைக்கு மன்னிப்பும் கோரியுள்ளார் அந்த முதியவர். முதியவரின் இச்செயற்பாட்டை பார்த்து சிரித்த பொலிஸார்,இனிமேல் இவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டாம் என அறிவுரை வழங்கியுள்ளனர்.

Related posts

Mahargama Cancer Hospital urgent need a Pet-Ct-Scanner Machine -needed Rs. 200 million -please help

wpengine

முஸ்லிம் காங்கிரஸ் முயற்சியால் கிண்ணியா தளவைத்தியாசாலை தரமுயர்த்தப்பட்டது

wpengine

மாவட்ட முச்சக்கரவண்டி சங்கங்களை புனரமைக்கும் நடவடிக்கை விரைவில் – போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன்

wpengine