உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

முதல்வர் யோகியின் ஆட்சியில் தொடரும் இறப்பு

உத்தரபிரதேசம் மாநிலம் கோராக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம்
நாட்டையே உலுக்கியுள்ளது. 

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே இந்த சம்பவத்துக்கும் காரணம் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டினார். மேலும் மருத்துவமனை முதல்வரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கோரக்பூர் மருத்துவமனையில் இன்று காலை மேலும் ஒரு குழந்தை உயிரிழந்தது. இதனால் குழந்தைகளின் பலி எண்ணிக்கை 70-ஆக உயர்ந்துள்ளது.

நேற்று(சனிக்கிழமை) மட்டும் 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளது. வெள்ளிக்கிழமை வரை பலி எண்ணிக்கை 60-ஆக இருந்தது. இதனிடையே, மருத்துவமனையில் முதல்வர் ஆதித்யநாத் இன்று பார்வையிட உள்ளார்.

Related posts

வவுனியா, புளியங்குளம் ஏ9 வீதியில் மாட்டுடன் முச்சக்கரவண்டி மோதல்

wpengine

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களினால் சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலைக்கு 5இலட்சம் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் வழங்கி வைப்பு!

Editor

சவுதி விஜயத்தின் நோக்கம் நிறைவேறியுள்ளது டிரம்ப்

wpengine