பிரதான செய்திகள்

முசலி பிரதேச கால்நடை அலுவலகத்தின் அசமந்த போக்கு! பல மாடுகள் உயிரிழப்பு உரிமையாளர்கள் விசனம்

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சுமார் 8 மாதம் தொடக்கம் 1 வருடத்திற்வுட்பட்ட மாடுகள் எந்தவித காரணமின்றி தொடராக உயிரிழந்து வருவதாக கால் நடை உரிமையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் அறிகையில்;

தொடராக மாடுகள் உயிரிலந்து வருவதாகவும் ,இதற்கான காரணங்களை இதுவரைக்கும் சம்பந்தப்பட்ட கால்நடை அலுவலகம்,முசலி சுகாதார அலுவலகம்,பிரதேச சபை இன்னும் தொடர்புடைய காரியாலயங்கள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் அறியமுடிகின்றன.

இந்த வார காலப்பகுதியில் மட்டும் சுமார் 30க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளதாகவும் இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

Related posts

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்தனர் சுமந்திரனும், சாணக்கியனும்!

wpengine

சீன – ஆசிய எக்ஸ்போ கண்காட்சியில் தென்னாசியாவின் முதலாவது நாடாக இலங்கை பங்கேற்பு; முதலீட்டாளர்களுக்கு அமைச்சர் றிசாத் அழைப்பு.

wpengine

மயானத்தை அகற்றுமாறு மக்கள் போராட்டம்! பொலிஸ் குவிப்பு

wpengine