பிரதான செய்திகள்

மீலாத் விழா இன்று யாழ்ப்பாணத்தில்

2017ம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இன்று யாழில் கோலாகலமாக நடைபெற்றது. 

2017ம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா நிகழ்வில் அதன் ஞாபகார்த்தமாக முத்திரை ஒன்றும் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.

இதன்போது பிரதம விருந்தினர் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் அமைச்சர் எம். எச். எம். ஹலீம் ஆகியோர் இணைந்து வெளியிட்டு வைத்தனர்.

ரூபா 15 பெறுமதியான இம்முத்திரையில் யாழ்ப்பாணம் முகமதியா ஜும்மா பள்ளிவாசலின் முகத்தோற்றம் (புதுப்பள்ளி) அச்சிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி வளாகத்தில் ஆரம்பமான இந்நிகழ்வில், பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் அமைச்சர் எம். எச். எம். ஹலீம், வர்த்தக வாணிப அமைச்சர் றிசாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

Related posts

தேர்தல் பிரசாரங்கள் தொடர்பான சுவரொட்டிகளை அகற்ற சுமார் 2,000 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Maash

ராமநாயக்கவின் வெற்றிடத்துக்கு நியமிக்கப்பட்ட அஜித் மான்னப்பெரும

wpengine

வவுனியா நகரசபை எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை

wpengine