பிரதான செய்திகள்

மார்ச்சியில் மாகாண சபை தேர்தல்

உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை அடுத்து வருடம் நடத்த உள்ளதாக உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை அடுத்த வருடம் ஜனவரியிலும், மாகாண சபைத் தேர்தலை மார்ச்சிலும் நடத்த உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சாதாரணமாக உறுப்பினர் ஒருவரின் மனைவி அல்லது பிள்ளைகள் ஆகியோருக்கு வாய்ப்பளிப்பதைத் தவிர்த்து, ஏனையவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு குடும்பத்துக்கு ஒருவர் என்ற எண்ணக்கருவின் அடிப்படையில், உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டும் என அரசியல் கட்சிகளிடம் அமைச்சர் பைஸர் முஸ்தபா கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

மன்னார் டிப்போ ஊழியர்களின் கோரிக்கை நியாயமானது வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன்

wpengine

அனைத்தும் தெரிந்தவர் அமைச்சர் றிஷாட்! குத்திகாட்டிய விக்னேஸ்வரன்

wpengine

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் சாதனை மாணவர்கள் கௌரவிப்பு

wpengine