பிரதான செய்திகள்

மஹிந்தவுக்கு ஆதரவான பிக்குகளின் சத்தியாக்கிரகம் தற்காலிகமாக கைவிடப்பட்டது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவப் பாதுகாப்பை நீக்கியமைக்கு எதிராக, பிக்குகள் மேற்கொள்ளவிருந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளதாக, முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 15ம் திகதி காலி – தர்மபால பூங்காவில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முன்னர் முடிவு செய்யப்பட்டது.

எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இது குறித்து கலந்துரையாடவுள்ளமையால் சத்தியாக்கிரக முடிவை தற்காலிகமாக கைவிட்டுள்ளதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று காலை நாரஹேன்பிடவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Related posts

காதலித்து திருமணம்! மனைவி மீது கணவன் சந்தேகம் இருவரும் தற்கொலை

wpengine

ஹோட்டல் மீதான தாக்குதல்! யூசுப் மொஹமட் இப்ராஹிம் என்பவர் மஹிந்தவுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டவர்.

wpengine

பரீட்சைக்காக இன்று திறந்திருக்கும் ஆட்பதிவு திணைக்களம்

wpengine