பிரதான செய்திகள்

மன்னார்,முசலி பகுதியில் 3 கோடி 56 இலட்சம் கேரள கஞ்சா

மன்னார், முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட காயக்குழி கிராம பகுதியில் சுமார் 3 கோடியே 56 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று இரவு இவை மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது சுமார் 356 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் ஒருவரும் கைது செய்யப்படவில்லை.

மீட்கப்பட்ட கஞ்சாப்பொதிகள் சிலாபத்துறை காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாஸாவை அடக்க அனுமதித்தது முஸ்லிம்களின் நலனுக்கா ? ஆட்சியாளர்களின் தேவைக்கா ? ஐ. நா வில் வெளியான உண்மை.

wpengine

உலகில் இஸ்லாமிய கிலாபத்துக்கு தடையாகவும், மத்திய கிழக்கை கொலைக்களமாகவும் உருவாக்கியவர்கள் யார் ?

wpengine

கணவர் தினமும் குளிக்காததால் மனைவி பொலீஸ் நிலையத்தில் புகார்

wpengine