பிரதான செய்திகள்

மன்னார்,மடுவில் உருக்குலைந்த நிலையில் சடலம்.

மன்னார் மடு பூமலர்ந்தான் நான்காம் கட்டை பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று மாலை சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நீதவான் விசாரணைகளுக்காக சடலம் குறித்த பகுதியிலேயே வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் இதுவரை அடையாளங் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அடம்பன் ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த 56 வயதான நபர் கடந்த 25 ஆம் திகதி முதற் காணாமற் போயுள்ளார்.

இது குறித்து கடந்த 27 ஆம் திகதி அடம்பன் பொலிஸ் நிலையத்தில் குறித்த நபரின் மனைவியால் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

சடலமொன்று மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமற்போன நபரின் சடலமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

Related posts

மகனை காப்பாற்ற 250 மில்லியன் சேகரித்த தந்தை! மகன் மரணம்

wpengine

பிரேமஜயந்தவுக்கு எதிராக கட்சி, ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்

wpengine

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக வவுனியாவில் கையெழுத்து

wpengine