பிரதான செய்திகள்

மன்னார், முருங்கன் பகுதிகளில் நாளை நீர்வெட்டு

மன்னார், முருங்கன் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நாளை மு.ப. 8.00 மணிமுதல் பி.ப. 4.00 மணி வரையான 8 மணி நேர நீர்வெட்டு அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

மன்னார் நீர்வழங்கல் திட்டத்தின் கீழ் மன்னார் மற்றும் முருங்கன் நீர்த்தாங்கிகளுக்கு நீர் பகிர்ந்தளிக்கப்படும் நீர் பாய்ச்சும் குழாயில் திருத்தப்பணிகளை முன்னிட்டு நீர்வெட்டு அமுல் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்கூட்டியே நீரைச் சேமித்து சிக்கனமாகப் பயன்படுத்தும்படி மக்களிடம் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்  சபை கேட்டுள்ளது.

Related posts

முல்லைத்தீவில் குடும்பத் தகராற்றில் தந்தையால் வெட்டப்பட்ட சிறுமி

wpengine

நாட்டில் தேங்காய் தட்டுப்பாட்டை உண்டாக்கிய குரங்கு இன்று மின்சாரத்தை கட்டுப்படுத்தியது .

Maash

பெற்றோல் விவகாரம்! கடமைக்கு திரும்பாத ஊழியர்கள் தாமாகவே விலகியதாக கருதப்படுவர்;ஜனாதிபதி

wpengine