பிரதான செய்திகள்

மன்னார் மீனவர்களுக்கு சந்தோஷமான செய்தி

மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் செயற்படுத்துகைக்கு அமைவாகவும், ஐரோப்பிய ஒன்றியத்தின்  நிதி உதவியுடன் உலக உணவு விவசாய ஸ்தாபனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட  கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் தகவல் நிலையத்தினை  இன்று வைபவ ரீதியாக கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் கைத்தொழில் பணிப்பாளர் நிகால் பாலித திறந்து வைத்தார்.

 

மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் என்.மெராண்டா தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் கைத்தொழில் பணிப்பாளர் நிகால் பாலித, உலக உணவு விவசாய ஸ்தாபனத்தின் திட்ட பணிப்பாளர் எஸ்.சுதர்மன், மீனவ அமைப்புக்களின் பிரதி நிதிகள்  என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது காப்புறுதி செய்திருந்த மீனவர் ஒருவர் கடலில் உயிரிழந்த நிலையில் அவரது மனைவிக்கு காப்புறுதி பணம் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

றிஷாட்,மனோ,கூட்டமைப்பு தரப்புக்கள் வாக்களிக்கவில்லை-டலஸ்

wpengine

சீதனக் கொடுமை! இளம்பெண்ணின் மரணம்

wpengine

ஊரடங்குச்சட்டத்தை அமுல்ப்படுத்தியதோ நோக்கம் மறுக்கப்படுகின்றது

wpengine