செய்திகள்பிராந்திய செய்திமன்னார்விளையாட்டு

மன்னார் மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டி.

இன்று (2025/02/11) மன்னார் நகர சபை மைதானத்தில், உதவி மாவட்டச் செயலாளர் அவர்களின் தலைமையில், மன்னார் மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு ஸ்ரீஸ்கந்தகுமார் அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும், மன்னார் மாவட்ட செயலகத்திலிருந்து வருகைதந்த அதிகாரிகள், நானாட்டான், மாந்தை, முசலி பிரதேச சபை உத்தியோகத்தர்கள், தேனி அமைப்பின் தலைவர், அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன், பங்கேற்ற அனைவருக்கும் பரிசுப்பொதிகள்களும் வழங்கப்பட்டன.

Related posts

முசலி பிரதேச Champion ஆக மணற்குளம் இளைளுர் கழகம்

wpengine

வவுனியா மாவட்டத்தில் ACMC ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து ஐந்து சபைகளுக்கான கட்டுப்பணம் (14) செலுத்தியது .

Maash

இன்று ஒரே நாளில் மொத்தம் 32 இந்திய மீனவர்களும், 5 படகுகளும் இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Maash