பிரதான செய்திகள்

மன்னார் மக்களுக்கான அறிவித்தல் மறு அறிவித்தல் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வேலை நாட்களில் வெளி நோயாளர் பிரிவு சேவைகள் அனைத்தும் நேற்று முதல் மறு அறிவித்தல் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் பிரிவு சேவைகள் அனைத்தும் மாலை 4.30 மணி கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பணிப்பாளர் ரி.ஒஸ்மன் டெனி தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளி நொயாளர் பிரிவு காலை முதல் இரவு 8 மணி வரை இயங்கி வந்துள்ளது.

ஆனால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவின் சேவைகள் மாலை 4.30 மணியுடன் மட்டுப் படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மாலை 4.30 மணிக்கு பின்னர் வெளி நோயாளர் பிரிவுக்கு வருகின்ற நோயாளர்களின் நோயின் தன்மை கருதி அவர்கள் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படும்.

இதனால் ஏற்படுகின்ற இடையூறுகளுக்கு நாம் வருந்துகின்றோம்.எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஓட்டமாவடி பிரதேச சபையின் ஏற்பாட்டில் தேசிய வாசிப்பு மற்றும் உள்ளுராட்சி மாதம் என்பனவற்றின் இறுதிநாள் வைபவம்

wpengine

வவுனியா, புதிய பேருந்து நிலையத்திற்கு எதிராக சுவரொட்டிகள்

wpengine

ஜனாதிபதிக்கு சாணக்கியன் ராசமானிக்கம் விடுத்த எச்சரிக்கை!

Editor