பிரதான செய்திகள்

மன்னார், தாராபுரம் ரூஹானிய்யா அரபுக் கல்லூரியின் ஆலிமாக்களுக்கான பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக ரிஷாட்!

மன்னார், தாராபுரம் ரூஹானிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் முதலாவது “அல்-ஆலிமாக்களுக்கான பட்டமளிப்பு விழா” இன்று தாராபுரம் அல்-மினா மகா வித்தியாலத்தின் கேட்போர்கூடத்தில் அரபுக்கல்லூரியின் அதிபர்களான இல்ஹாம், சஹ்துல்லாஹ் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ அல் ஹாஜ் ரிஷாட் பதியுதீன் அவர்கள் கலந்துகொண்டதுடன், விஷேட பேச்சாளராக அல்-ஹாபிழ் அல்/பாழில் றிஸ்வி(இஹ்யாயீ) கலந்துகொண்டு உரையாற்றி ஆலிமாக்களுக்கான பட்டமளிப்புக்களையும் வழங்கி வைத்தனர்.

இதில் ரூஹானிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் நிர்வாகிகள், பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

Related posts

நாமலின் வலையில் சிக்கிய ரோசி சேனாநாயக்கவின் மகள்?

wpengine

முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுக் கூட்டம்! ஊடகத்துறை பிரதியமைச்சர் பங்கேற்பு

wpengine

வட மாகாண வைத்தியசாலைகள் விசேட ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை.

Maash