பிரதான செய்திகள்

மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் விழா (படம்)

மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலையின் அதிபர் எம்.வை.மாஹிர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு, நேற்றைய தினம்(20) மன்னார் நகர சபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்விற்கு, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய, மன்னார் வலயக் கல்விப்பணிப்பாளர் எஸ்.சுகந்தி செபஸ்தியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

இதன்போது, பாடசாலை மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் கடந்த 2015 ஆம் மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக்கேடயங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எங்களுடைய உரிமையை பெறுவதற்கு இன்றிருக்கின்ற ஒரேயொரு விடயம்தான், மாகாணசபை முறை மட்டும்

wpengine

கைத்துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தினார் சிறீதரன் முறைப்பாடு

wpengine

மஸ்தான் அவர்களின் முயற்சியில் மன்னார், முல்லைத்தீவில் 15 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு.

wpengine