பிரதான செய்திகள்

மன்னாரில் பெருநாள் தொழுகை! மியன்மார் முஸ்லிம்களுக்கு விஷேட பிராத்தனை

முஸ்லிம் மக்களின் புனித ஹஜ் திருநாளை முன்னிட்டு மன்னார் புதிய பாலத்திற்கு அருகே அமைந்துள்ள திறந்த வெளியரங்கில் முஹம்மத் நபியின் வழி முறையில் பெருநாள் தொழுகை இடம்பெற்றுள்ளது.

‘மன்னார் தௌஹீத் ஜமாஅத்’ ஏற்பாட்டில் இன்று காலை 6.45 மணியளவில் பெருநாள் தொழுகைநடைபெற்றுள்ளது.

இதன்போது மௌலவி ரி.எம்.தஸ்னீம் காசிம் தொழுகை மற்றும் பெருநாள் உரை நிகழ்த்தியுள்ளார்.

இந்த நிலையில், இந்த தொழுகை நிகழ்வில் மியன்மாரில் துன்பப்படும் முஸ்ஸிம் மக்கள் அமைதியான வாழ்வினை பெறுவதற்காகவும் விசேட பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், இந்த நிகழ்வில் முஸ்ஸிம் மக்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

Related posts

நல்லாட்சியினை உருவாக்கி குழுக்கள் 15ஆம் திகதி முதல் எதிராக போராட்டம்

wpengine

தம்புத்தேகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழப்பு!

Editor

போராட்ட களத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட அமைச்சர் சந்திரசேகரம்..!

Maash