பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னாரில் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களை வழங்கிய சஜித், முன்னால் அமைச்சர்

நவீன உலகில் வளமான டிஜிட்டல் எதிர்காலத்திற்காக இந்நாட்டின் இளைய தலைமுறையை, தொழில்நுட்பத்திலும் ஸ்மார்ட் கணனி பயன்பாட்டிலும் தேர்ச்சி பெற்ற சமூகமாக கட்டியெழுப்பும் ‘பிரபஞ்சம்’ வேலைத்திட்டத்தினூடாக, டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று (08) மன்னார், எருக்கலம்பிட்டி மகளிர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில், விஷேட அதிதியாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் மற்றும் கல்வி அதிகாரிகள், மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

இனவாதம், மதவாதம் இல்லாத கௌரவமான ஓர் தலைவர் என்றால் அது ரணில் விக்ரமசிங்க மட்டும் தான்

wpengine

தமிழ் மொழி பதில் : ஆளும் தரப்பு mpக்கள் இனவாதம் பேசுவதாக அப்புஹாமி குற்றச்சாட்டு.

Maash

நான் பிரதமரானால் பட்டதாரிகளுக்கு மூன்று மாதங்களுக்குள் நியமனங்கள்

wpengine