பிரதான செய்திகள்

மன்னாரில் ஆட்டோ விபத்து

மன்னார் – மடு, பெரியபண்டிவிரிச்சான் பகுதியின் உள் வீதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து நேற்று மதியம் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெரியபண்டிவிரிச்சான் உள் வீதியில் கட்டுப்பாட்டை மீறி முச்சக்கரவண்டி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் சாரதி உட்பட முச்சக்கரவண்டி பயணம் செய்த இருவருமே காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

Related posts

பிற்பகல் 4 மணியுடன் முடிவடைந்த நாடுபூராவும் பெற்ற வாக்களிப்பு வீதம் !

Maash

ஜப்பானில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு

wpengine

கல்விப்பணி புரிந்தோரை காலம் அழிக்காது

wpengine