பிரதான செய்திகள்

மன்னாரில் 40வயதிற்கு மேற்பட்டோருக்கான விளையாட்டு போட்டி! டெனீஸ்வரன்,றிப்ஹான் பங்கேற்பு

மன்னார் கால்பந்தாட்ட முதுநிலை சங்கத்தினால் வருடா வருடம் நடத்தப்படும் நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியானது மன்னாரில் நடைபெற்றுள்ளது.

குறித்த போட்டியானது கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் அதன் இறுதிப் போட்டிகள் மன்னார் பொது விளையாட்டரங்கில் நடைபெற்றது.

ஆறு கழகங்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் பனங்கட்டுகொட்டு புனித சூசையப்பர் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது.

 

குறித்த இறுதிப்போட்டியில் பிரதம விருந்தினராக வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனும், கௌரவ விருந்தினராக வட மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீனும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

வங்கி இடமாற்றம்!பெண் தூக்கில் தொங்கி தற்கொலை

wpengine

தன்னை அதிகாரமிக்கவராக காட்டிக்கொள்ள நினைக்கின்றார் ஹாபீஸ் நசிர் -அமீர் அலி

wpengine

வவுனியா,யாழ் மாவட்ட மாவட்டச் செயலாளர் மரணம்

wpengine