மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் தொழில் சந்தை இன்று (5) வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
வவுனியா மாவட்ட செயலாளர் சரத் சந்திர, உதவி மாவட்ட செயலாளர் சாபர்ஜா, மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) நா.கமலதாசன், வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் காஞ்சனா குமார ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்திருந்தனர்.
இத்தொழில் சந்தையில் 30க்கு மேற்பட்ட நிறுவனங்கள் வருகை தந்திருந்ததுடன், 100க்கு மேற்பட்ட இளைஞர், யுவதிகள் தொழில்வாய்ப்பினை பெறும் நோக்குடன் கலந்துகொண்டிருந்தனர்.


