பிரதான செய்திகள்

மனிதர்களை பழிவாங்கும் அரசாங்கம் மஹிந்த

இந்த அரசாங்கத்துக்கு மனிதர்களைப் பழிவாங்குவதைத் தவிர வேறு ஒன்றும் செய்யத் தெரியாது என்பதையே பொருளாதார வீழ்ச்சி நிலை எடுத்துக் காட்டுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எமது ஆட்சிக் காலத்தில், யுத்தம் இருந்த காலப்பகுதியிலாவது இவ்வாறு ரூபாவின் பெறுமதி குறைவதற்கு நாம் இடமளிக்கவில்லை.

இந்த அரசாங்கம் பொய்யான குற்றச்சாட்டுக்களை வைத்துக் கொண்டு வேறு விடயங்களில் கவனம் செலுத்துவதனால், ரூபாவைக் காப்பாற்றத் தவறியுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் கடன் சுமையை மாத்திரம் தூக்கிப் பிடித்து பிரச்சாரம் செய்து வருகின்றார்கள் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Related posts

வடமேல் மாகாணத்தில் வேகமாகப் பரவும் தோல் நோய்!

Editor

கொழும்பில் போதை மாத்திரை விற்பனையை பொலிஸார் பார்த்துக்கொண்டிருக்கிற்ன்றனர் -முஜீபுர் றஹ்மான்

wpengine

சமூக வலைத்தளம் ஊடான பதிவு பதற்ற நிலைக்கு காரணம்

wpengine