பிரதான செய்திகள்

மத வழிபாட்டு இடங்களிலும் கூட்டுச் செயற்பாடுகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை

இலங்கையில் அனைத்து மத வழிபாட்டு இடங்களிலும் கூட்டுச் செயற்பாடுகளுக்கு இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பரவும் கோவிட் வைரஸ் பெருந்தொற்று நிலைமையைக் கருத்தில்கொண்டு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மத வழிபாட்டு இடங்களில் ஒரே நேரத்தில் 25 பேர் மாத்திரமே வழிபாட்டில் ஈடுபட முடியும் எனவும் சுகாதார பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,இலங்கையில் கோவிட் வைரஸின் மூன்றாவது அலையின் தாக்கம் மிகவும் மோசமான கட்டத்தை அடைந்து வருவதாக சுகாதார அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில்,நாட்டில் கடந்த சில தினங்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவிட் தொற்றாளர்கள் நாளாந்தம் அடையாளம் காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு முகாம்களில் வாழும் குடும்பங்களுக்கு நிரந்தர வீடு .

Maash

இராஜாங்க அமைச்சு தேவையில்லை! அமைச்சு பதவி தான் வேண்டும்.

wpengine

குருணாகல் மாவட்டத்தின் முதாவது முஸ்லிம் MPஅல் ஹாஜ் AHM. அலவி காலமானார்!

Editor