பிரதான செய்திகள்

மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு பேஸ்புக் தடை ஜனாதிபதி

பேஸ்புக் உட்பட சில சமூக வலைத்தளங்கள் பல விடயங்களுக்கு தடையாக உள்ளதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு பேஸ்புக் போன்றவைகள் தடையாக உள்ளதென ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.

நுவரெலியா பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி மின்சார சபை ஊழியர்களின் எதிர்ப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அரசாங்க மின்சார சபை ஊழியர்களுக்கு மாத்திரம் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், கீழ் வகுப்பு ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படாமையினால் அவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

மேலும் சைட்டம் எதிர்ப்பினை கடந்த அரசாங்கமே உருவாக்கியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

அதாவுல்லாவுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட வேண்டும்.

wpengine

அரேபிய அரசாங்கம், மக்காவிற்கு புனிதப் பயணம் செல்வதற்கான வீசாக்களை தற்காலிகமாக நிறுத்தி

wpengine

பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கிய முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்

wpengine