பிரதான செய்திகள்

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களினால் சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலைக்கு 5இலட்சம் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் வழங்கி வைப்பு!

மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க சுமார் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் சிலவற்றை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அல் ஹாஜ் ரிஷாட் பதியுதீன் அவர்களினால் பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் தன்ஸீஹ் அவர்களிடம் நேற்று (22) வழங்கி வைக்கப்பட்டது.

இக்கட்டான இக்கால சூழ்நிலையிலும் பிரதேச வைத்தியசாலை மற்றும் மக்களின் நலன் கருதி இவ் உதவியை பெற்றுக் கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவர்களுக்கு வைத்தியசாலை அபிவிருத்திச்சங்கம் நன்றியை தெரிவித்துள்ளது.

Related posts

வட, கிழக்கு மக்களின் காணி, மீள்குடியேற்ற பிரச்சினை! 24ஆம் திகதி விசேட கூட்டம்

wpengine

ஒரு லச்சம் வேலைவாய்ப்பில் வட மாகாண மக்களுக்கு முன்னுரிமை

wpengine

உழவு இயந்திரத்தின் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு- யாழில் சம்பவம்!

Editor