பிரதான செய்திகள்

மகாநாயக்க தேரர்களை சமாளிக்க தயாராகும் கட்சி தலைவர்கள்

புதிய அரசமைப்புக்கு எதிராக மகாநாயக்க தேரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், அவர்களைச் சந்தித்து புதிய அரசமைப்புக்கான முக்கியத்துவம் குறித்து தெளிவுபடுத்துவதற்கு அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இதன்படி ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகளின் பிரமுகர்கள் விரைவில் மகாநாயக்க தேரர்களை சந்திக்கவுள்ளனர்.

மல்வத்த பீடத்தின் மகாநாயக்க தேரர் வெளிநாடு சென்றிருப்பதால் அவர் நாடு திரும்பியதும் மேற்படி சந்திப்புகள் ஆரம்பமாகும் எனத் தெரியவருகின்றது.

புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கைமீது எதிர்வரும் 30ஆம், 31ஆம் திகதிகளிலும், அடுத்த மாதம் முதலாம் திகதியும் அரசமைப்பு நிர்ணய சபையில் விவாதம் நடைபெறவுள்ளது.

புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சியை உடனடியாகக் கைவிடுமாறு மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளதால், அவர்களைச் சந்தித்து தமது கட்சிகளின் நிலைப்பாடுகளை அறிவிக்காமல் விவாதத்தில் பங்கேற்றால் அது சிக்கலாக அமைந்துவிடும் என்பதாலேயே சந்திப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க உட்பட கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அடங்கிய குழுவினரே மகாநாயக்க தேரர்களைச் சந்திக்கும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

ஒற்றையாட்சி, நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படக்கூடாது உள்ளிட்ட விடயங்களில் மகாநாயக்க தேரர்களின் நிலைப்பாட்டிலேயே சுதந்திரக் கட்சி, ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீது விவாதம் நடத்துவதற்காக அரசமைப்பு நிர்ணய சபை எதிர்வரும் 30ஆம் திகதி கூடுமென அறிவிக்கப்பட்டிருந்தாலும், விவாதம் ஒத்திவைப்பதற்குரிய சாத்தியம் இருப்பதாகவும் தெரியவருகின்றது.

இது தொடர்பில் கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே இறுதி முடிவு எடுக்கப்படும்.

Related posts

உள்ளுராட்சி எல்லை நிர்ணயம் தெல்தோட்டைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

wpengine

வவுனியாவில் 13வயது மாணவியின் காதல் துஷ்பிரயோகம்

wpengine

யாழ்பாணத்தில் அதிகாலை மீண்டும் வாள்வெட்டு! தொடர் பயங்கரவாதம்

wpengine