பிரதான செய்திகள்

பௌத்தர்களுக்கு எதிராக சதித்திட்டங்கள் இல்லை- ஓமல்பே சோபித தேரர்

பௌத்த பிக்குகளுக்கோ, பௌத்தர்களுக்கோ எதிராக எவ்வித சதித்திட்டங்களும் செயற்படுத்தப்படவில்லை என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள பிக்குமாரை கைது செய்து விளக்கமறியலில் வைத்தமை சம்பந்தமாக சிலர் பொய்யான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

பத்தரமுல்லையில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பௌத்தர்கள் அல்லாத நபர்களின் ஊழல்,மோசடிகளை மூடிமறைக்க ஒரு சக்தி செயற்பட்டு வருகிறது என்றும் ஓமல்பே சோபித தேரர் கூறியுள்ளார்.

Related posts

மன்னார் மறைமாவட்ட பேராயரை சந்தித்து கலந்துரையாடிய அமைச்சர் றிஷாட்

wpengine

சித்தாண்டி சின்னவெளியில் அறுவடை நிகழ்வு (படங்கள்)

wpengine

இலங்கையில் 2021 டிசம்பரில் உணவுப் பொருட்களின் விலை 22.1% அதிகரித்து

wpengine