செய்திகள்பிரதான செய்திகள்

போலிச் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். – எரிசக்தி அமைச்சு.

எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலி மற்றும் தவறான செய்திகளால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என எரிசக்தி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவும் தவறான செய்திகளை அவதானித்துள்ளதாக அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் உள்ளதாகவும், முன்கூட்டியே ஆர்டர் செய்யப்பட்ட எரிபொருள் இருப்புகளைப் பெற தேவையான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

எனவே, பொதுமக்கள் போலிச் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என எரிசக்தி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

இனம், மதம், சமயம் என்ன விரச்சினைகளிற்கு அப்பால், பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்

wpengine

இலங்கை குடிமக்கள் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும்

wpengine

ஐந்து ஆண்டு காலத்துக்குள் இலங்கையின் முழுமையான பிரஜைகளாக மாறும் மலையக தமிழர்கள்.!

Maash