தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

போலி பேஸ்புக்! சில்வா முறைப்பாடு

தனது பெயரை பயன்படுத்தி போலியான முகப்புத்தக கணக்கொன்று பராமரிக்கப்படுவதாக தெரிவித்து இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா கணினி அவசர நடவடிக்கை அமைப்பில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முகப்புத்தக கணக்கில் தன்னை பற்றி தவறான செய்திகள் வௌியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனக்கு முகப்புத்தக கணக்கோ அல்லது வேறு எந்த சமூக ஊடக கணக்குகளோ இல்லை என எமது செய்திச் சேவைக்கு தெரிவித்த அரவிந்த டீ சில்வா , இவ்வாறு போலியான சமூக ஊடக கணக்குகளை பராமரிப்பவர்களுக்கு எதிராக , இதற்கு முகங்கொடுத்த நபர்கள் முறைப்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.

விசேடமாக இவ்வாறான விடயங்கள் காரணமாக , இளைஞர் யுவதிகள் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவங்கள் பதிவாகின்றமையால் இவ்வாறு முறைப்பாடு செய்வது மிக முக்கியமானதாகும் என அவர் வலியுறுத்தினார்.

Related posts

மீள்குடியேற்ற செயலணி! பிரதமரினால் நிராகரிக்கபட்ட விக்னேஸ்வரன்.

wpengine

சீனா நாட்டில் நடைபெறவுள்ள கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக கிழக்கிலிருந்து ஒரேயொரு முஸ்லிம் அதிபர் சீனா நோக்கி பயணமானார்.

wpengine

முல்லைத்தீவு மாவட்டத்தில் வயலுக்கு அறுவடைக்கு சென்றவர் சுட்டுக் கொலை

wpengine