செய்திகள்பிரதான செய்திகள்

போதைப்பொருள் வலையமைப்புகளை அடையாளம் காண்பதற்கான விசேட நடவடிக்கை..!

சிறிய, நடுத்தர மற்றும் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். 

இதன்படி, நேற்று (13) முதல் அனைத்து பிராந்திய காவல் பிரிவுகளையும் உள்ளடக்கி போதைப்பொருள் வலையமைப்புகளை அடையாளம் காண்பதற்கான விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இந்த நடவடிக்கையில் தேவைக்கேற்ப விசேட அதிரடிப்படையினர், இராணுவம் மற்றும் மோப்ப நாய் பிரிவின் உதவியையும் பெறுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 

சட்டவிரோத போதைப்பொருட்களைக் கடத்துதல், தம்வசம் வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கான தடுப்புக்காவல் உத்தரவுகளையும் பெறுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

மன்னார் மனிதப் புதைகுழி விலங்கால் கால்கள்

wpengine

இது முழு முஸ்லிம் மக்களின் போராட்டம்! மறிச்சுக்கட்டியில் அமீர் அலி (விடியோ)

wpengine

இன்று ஒரே நாளில் மொத்தம் 32 இந்திய மீனவர்களும், 5 படகுகளும் இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Maash