செய்திகள்பிரதான செய்திகள்

போதை பொருளுக்கு பணம் கொடுக்க மறுத்ததால் தாயை கொலை செய்த மகன் .

போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர் தனது தாயைக் கொலை செய்த சம்பவம் ஒன்று கொழும்பு – தெமட்டகொட பகுதியில் பதிவாகியுள்ளது.

போதைப்பொருளைக் கொள்வனவு செய்வதற்குப் பணம் கொடுக்க மறுத்ததால் இந்த நபர் தாயை தாக்கி கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 68 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இறந்த பெண்ணின் மகன் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும்,இதன் காரணமாக அவர்களுக்கு இடையில் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

மக்கள் அனைவரும் சுதந்திரக் கனவை ஒன்றாகக் காண்போம்; ஜனாதிபதி

Maash

செல்வநகர் முஸ்லிம்களும் மகிந்த ஆட்சியில் விதைக்கப்பட்ட தீயினை இன்று அறுவடை செய்கின்றார்கள்.

wpengine

இடைக்கால வரவு செலவு அறிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில்

wpengine