பிரதான செய்திகள்

பொத்துவில் முஸ்லிம்களின் காணிகள் அபகரிப்பு! மக்கள் ஆர்ப்பாட்டம்

பொத்துவில் பகுதியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 650ஏக்கர் காணி வன பரிபாலன இலாகாவினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமும், ஊர்வலமும் நடத்தப்பட்டுள்ளன.

குறித்த ஆர்ப்பாட்டமும், ஊர்வலமும் நேற்று புலிபிடித்தசேனை கமக்காரர் அமைப்பின் ஏற்பாட்டில் மதுரம்வெளி, புலிபிடித்தசேனை பகுதி மக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கையில்,

வனபரிபாலன இலாகாவினர் எமது பகுதிக்கு வந்து பெர்மிட் காணிகளில் கட்டைபோட்டு ஆக்கிரமிக்கத் தலைப்பட்டனர்.

 

நாம் இது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர், அம்பாறை மாவட்ட அரச அதிபர் உள்ளிட்ட பலருக்கும் எழுத்து மூல முறைப்பாட்டினை அனுப்பியிருந்தோம்.

எனினும் இதுவரையில் யாரும் பதில் அனுப்பவுமில்லை, நடவடிக்கை எடுக்கவுமில்லை. அதனால் நாங்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts

தேர்தலில் சிறுபான்மை சமூகம் அச்சமற்ற சூழலில்  வாக்களிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்

wpengine

சந்திரிக்கா தலைமையிலான கூட்டணி சஜித்துக்கு ஆதரவு

wpengine

சமூக வலைத்தளங்கள் ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல்! விமான நிலையத்தில் கைது

wpengine