பிரதான செய்திகள்

பொது மக்களுக்கு அறிவித்தல்! வவுனியாவில் சுவரொட்டிகள்

வவுனியா – பழைய பேருந்து நிலையம் 31ஆம் திகதியில் இருந்து செயற்படாது என வவுனியா நகரசபையில் பொது மக்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபையின் செயலாளரினால் கையொப்பமிட்டு பழைய பேருந்து நிலையத்தில் அறிவித்தல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

வடமாகாண முதலமைச்சரின் பணிப்புரைக்கமைய வவுனியா நகரசபைக்குரிய பேருந்து நிலையம் இன்று நள்ளிரவு 12 மணியில் இருந்து மூடப்படவுள்ளதால் இன்றில் இருந்து பொது மக்கள் தமது பிரயாணங்களை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து பேருந்துகளும் சேவையில் ஈடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

மைத்திரியின் 2018 இன் அமெரிக்க பயணத்துக்கு 50.4 மில்லியன் செலவு .

Maash

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்

wpengine

வட மாகாணத்திற்கு புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்.

wpengine