பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

பேசாலை விளையாட்டு மைதானத்திற்கு நிதி ஒதுக்கிய சார்ள்ஸ் பா.உ

மன்னார், பேசாலை புனித வெற்றி நாயகி விளையாட்டு மைதான நிர்மாணிப்பிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் 15 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் குறித்த மைதானத்தின் நிர்மாணிப்பு வேலைகள் இடம்பெறவுள்ளன.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், வடமாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி பிரிமூஸ் சிறாய்வா ஆகியோர் இணைந்து அடிக்கல்லினை நாட்டி வைத்து, பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளனர்.

குறித்த நிகழ்வின்போது, பேசாலை பங்குத்தந்தை, அருட்பணி பேரவை பிரதிநிதிகள், வெற்றி நாயகி விளையாட்டுக்கழக வீரர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

பாப்பரசர் புகழுடலுக்கு பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் அஞ்சலி செலுத்தினார்.

Maash

நீத்தார் பெருமை : அன்பு நிறைந்த ஆசான் அமானுல்லா அதிபருக்கு மடல்

wpengine

சமூக வலைத்தளங்கள் ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல்! விமான நிலையத்தில் கைது

wpengine