பிரதான செய்திகள்

புத்தளம் பள்ளிவாசலுக்கு அருகாமையில் 15 வயது சிறுவன் கொலை

புத்தளம் சமீரகம  பகுதியிலுள்ள மைய்யித்துபிட்டி பள்ளிவாசல் அருகாமையிலுள்ள தோட்டம் ஒன்றிலிருந்து கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சுமார் 15 வயதுடைய  சிறுவனின் உடல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

கொலையாளி நாகவில்லை சேர்ந்த  நபர் எனவும், குறித்த நபர் பொதுமக்களால் அடித்து பிடிக்கப்பட்டு முந்தல் பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட பின் வைத்தியாலையில் அனுமதிக்க பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

உயிரிழந்த சிறுவன் சமீரகமயை சேர்ந்த நஸார் என்பவரின் மகன் என தெரியவருகிறது.

இன்று பிற்பகல் இடம்பெற்ற இப்படுகொலைக்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை, பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

விக்னேஸ்வரன் ,மஹிந்த இருவரும் இனவாதத்தை விதைக்கின்றனர்- டில்வின் சில்வா

wpengine

முல்லைத்தீவு மக்களே! சுனாமி ஒத்திகை பயம் வேண்டாம்.

wpengine

ராஜபக்ஷவிற்காக தியாகம் செய்ய இருக்கின்றோம் என்று சொன்னவர்கள் தலைமறைவு

wpengine