பிரதான செய்திகள்

புத்தளத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் 4பேர் காயம்! முன்று ஆசிரியர்கள்

(கரீம் ஏ. மிஸ்காத்)

நேற்று பகல் குருனாகலில் இருந்து புத்தளம் நோக்கி வந்த வேளை குறித்த கார்,  புத்தளம் வலயக் கல்வி அலுவலகத்துக்கு அருகில் அமைந்துள்ள சிறிய பாலம் ஒன்றில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இதன் போது காரில் பயணித்த புத்தளம் வலயக் கல்விப்பணிமனையில் பாட இணைப்பாளராக கடைமயாற்றும் எம்.எம்.ஜாபிர், அவரது மனைவி ஆசிரியை மாஹிரா, மகள் சஹ்தா , மாஹிரா ஆசிரியையின் தாய் திருமதி. மலிக் ஆகியோரே விபத்தில் காயமடைந்தவர்களாவர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, திருமதி. மலிக் அவர்கள் மாத்திரம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முன் சென்ற துவிச்சக்கர வண்டிக்கு இடம் கொடுக்க முற்பட்டவேளையே இவ்விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளம் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.unnamed-13

unnamed-11

unnamed-10

Related posts

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள இடங்களுக்கு மன்னாருக்கு வர தடை

wpengine

வடக்கின் புதிய ஆளுநராக தமிழன் மஹிந்த நடவடிக்கை

wpengine

காலாவாதியான அரசியலமைப்பை இரத்துச் செய்து, பொதுஜன வாக்கெடுப்புடன் புதிய அரசியலமைப்பு . !

Maash