பிரதான செய்திகள்

பீ.எஸ்.எம்.சாள்ஸ், வட மாகாண ஆளுநராக நியமனம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் வடக்கு மாகாண ஆளுநராக பீ.எஸ்.எம்.சாள்ஸ் பதவியேற்றுள்ளார்.


இன்று இந்த பதவியேற்பு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது வட மாகாண ஆளுநர் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டிருந்தது.

அந்தவகையில், சுகாதார அமைச்சின் செயலாளராக செயற்பட்டு வந்த பீ.எஸ்.எம்.சாள்ஸ், வட மாகாண ஆளுநராக நியமிப்பது தொடர்பில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்க விசா விண்ணப்பத்தில் பேஸ்புக், ட்விட்டர் கணக்கு விபரங்களைக் குறிப்பிட வேண்டும்.

wpengine

ஜே.வி.பி-யால் கொல்லப்பட்ட ஐ.தே.க உறுப்பினர்களின் பட்டியல் நாடாளுமன்றில் தாக்கல்!

Maash

கத்தாருடனான உறவு தொடரும் என துருக்கி அதிபர் எர்டோகன் அறிவிப்பு

wpengine