பிரதான செய்திகள்

பிரதமர் பதவியை எவரும் குழிதோண்டிப் பறிக்க முயலமாட்டார்கள்.

வீண் வதந்திகளைப் பரப்பி ஐக்கிய தேசியக் கட்சியை உடைக்கலாம் எனக் கனவு காண வேண்டாம் என மஹிந்த அணியினரிடம் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான சதி முயற்சிகள் அக்கட்சிக்குள்ளேயே எழுந்துள்ளன என தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் செய்தியாளர் ஒருவர் பிரதமர் ரணிலிடம் வினவிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எவ்வித முரண்பாடுகளும் இல்லை. எனது பிரதமர் பதவியை எனது கட்சிக்குள் இருக்கும் எவரும் குழிதோண்டிப் பறிக்க முயலமாட்டார்கள்.

வீண் வதந்திகளைப் பரப்பி ஐக்கிய தேசியக் கட்சியை உடைக்கலாம் எனக் கனவு காண வேண்டாம் என மஹிந்த அணியினரிடம் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

Related posts

காணி பிரச்சினைக்கு பிரதேச மட்டத்தில் காணி செயலகம்

wpengine

விக்னேஸ்வரனின் சமஷ்டி கோரும் யோசனை வடமாகாண சபையில் நிறைவேற்றம்

wpengine

அன்று மகிந்தவின் சகா இன்று சஜித்தின் ஆலோசகர்: கடுமையாக எதிர்க்கும் ஐ. மக்கள் சக்தியின் எம்.பிக்கள்

wpengine