அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஹிருணிகா ! சிறிது நேரத்திலேயே மீளப்பெறப்பட்டது.

வழக்கு விசாரணைக்கு நீதிமன்றில் ஆஜராகாத முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (10) உத்தரவிட்டுள்ளார்.

வீதி நாடகம் நடத்தியதாகவும், பொதுமக்களை துன்புறுத்தியதாகவும், பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகவும் கூறி கறுவாத்தோட்ட பொலிஸாரால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் (2022) தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகாத காரணத்தினால் இன்று காலை இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சந்தேகநபர் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் ஆஜராகியதையடுத்து, பிடியாணைகளை மீளப்பெறுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

“இலங்கையின் புதிய தொழிற்துறை வலயங்களில் ஈரானிய முதலீட்டாளர்களும் ஆர்வம் காட்ட வேண்டும்” றிசாத் பகிரங்க அழைப்பு

wpengine

11 மற்றும் 12 ஆம் திகதிகளில், அதிவேக நெடுஞ்சாலைகளில் 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிக வருமானம் !

Maash

ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் விமானிகள் வௌியிட்டுள்ள அறிக்கை!

Editor