உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

பாலஸ்தீனத்தில் 17 வயது சிறுவன் சுட்டுக்கொலை – இஸ்ரேலிய காவல்துறை

இஸ்ரேலிய வீரர் ஒருவரைக் கத்தியால் குத்தியதால், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 17 வயதுச் சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய காவல்துறை தெரிவித்திருக்கிறது.

எப்ரோன் நகரில் உள்ள பேட்ரியார்க் குகைக்கு அருகில் 17 வயதான சிறுவனை எல்லைப் படையினர் சுட்டனர்.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள பாலஸ்தீனப் பகுதியில் தெருக்களில் தினமும் தாக்குதல் நடப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

ஒக்டோபர் மாதத்திலிருந்து  இம்மாதிரி தாக்குதல்களில் சுமார் 190 பாலஸ்தீனியர்களும் 28 இஸ்ரேலியர்களும் 2 அமெரிக்கர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

Related posts

அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் கோதுமை மா!

Editor

அன்பின் உங்களுக்கு …! சிந்தித்து முடிவெடுங்கள்.

wpengine

அஷ்ரப்பின் கால் தூசுக்குக் கூட ஹக்கீம் பெறுமதியற்றவரென கூறியவர் தான் இந்த ஹரீஸ்

wpengine