செய்திகள்பிரதான செய்திகள்

பாலஸ்தீன மக்களுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்..!

பாலஸ்தீனத்தில் நடத்தப்படுகின்ற போர் குற்றங்களுக்கு நீதி கோரி மட்டக்களப்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொலுகையை அடுத்த்து கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தில் கொல்லப்படுகின்ற பொது மக்களுக்கு நீதியும் சுதந்திரமும் கிடைக்க வேண்டும் என்று பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மட்டக்களப்பு மீராவோடையில் கவனயீர்ப்பு பேரணி நடைபெற்றது.

மட்டக்களப்பு மீராவோடை இளைஞர்களின் ஏற்பாட்டில், மீராவோடை ஜும்மா தொழுகையின் பின் மீரா ஜும்மா பெரிய பள்ளிவாசல் முன்பாக ஒன்று கூடி கவனயீர்ப்பு பேரணியை முன்னெடுத்தனர்.

இதன்போது பாலஸ்தீன மக்களுக்கு நீதி கோரி பதாதைகளை ஏந்தியவாறும் இஸ்ரேலுக்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறும் கவனயீர்ப்புப் பேரணியில் ஈடுபட்டனர்.

Related posts

பிள்ளையானுக்கு அமைச்சு பதவியா? கண்டிக்கு அழைப்பு

wpengine

இலவச ஊடகப் பயிற்சி எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி

wpengine

மீராவோடை அஸ்-ஷபர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இப்தார் (படம்)

wpengine