செய்திகள்பிரதான செய்திகள்

பயணித்து கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது .

இரத்தினபுரி, அயகம, கங்கொடகந்த பிரதேசத்தில்  பயணித்து கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

இந்த தீ விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) இரவு இடம்பெற்றுள்ளது.

தீ விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

புகையிரத கடவையில் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளைஞர் புகையிரதத்தில் மோதி பலி..!

Maash

5 மாதங்களில் 2 மெற்றிக் தொன் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Maash

இதவாதத்தை பலபடுத்தும் விக்னேஸ்வரன்! உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும்.

wpengine