பிரதான செய்திகள்

நெற்செய்கைக்கு தேவையான இரசாயன உரம் விரைவில்! அமைச்சர் ஜானக்க வக்கும்புர

நெற்செய்கைக்கு தேவையான இரசாயன உரத்தை விரைவில் வழங்குவதாக விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்தார்.

சிறுபோக உற்பத்திக்கு தேவையான திண்ம மற்றும் திரவ உரத்தை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

65,000 மெட்ரிக் தொன் உரத்தை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ஜானக்க வக்கும்புர மேலும் தெரிவித்தார்.

Related posts

மன்னார் சவேரியார் கல்லூரியின் 150 வருட பூர்த்தி கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

wpengine

4 அரசியல் கட்சிளுக்கு தேர்தல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு!

Editor

அமைப்புகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பான அதிவிசேட வர்த்தமானி

wpengine