பிரதான செய்திகள்

நீர் கட்டணம் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும் அமைச்சர் ஹக்கீம்

நீர்க் கட்டணத்தை அதிகரிப்பது குறித்து அமைச்சரவையே தீர்மானிக்க வேண்டும் என நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது, நீர்க்கட்டண அதிகரிப்பு எதிர்காலத்தில் இடம்பெறுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நீர்க் கட்டண அதிகரிப்பு எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.
எனினும், அதனை இப்போது மேற்கொள்வதா? இல்லையா? என்பதை அமைச்சரவையே தீர்மானிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 5ஆண்டுகளாக நீர்க்கட்டணத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால், நீர்வழங்கல் சபை நிதி தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனாவினால் 49வயதான ஒருவர் மரணம்! வவுனியாவில் அடக்கம்

wpengine

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம்

wpengine

முஸ்லிம்களின் மனதை புண்படுத்திய விக்னேஸ்வரன்! மன்னிப்பு கேட்ட வேண்டும்.

wpengine