பிரதான செய்திகள்

நீதிபதி அய்ஷா ஆப்தீன் கட்டாய விடுமுறையில் அனுப்பட்டுள்ளார்.

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு மாவட்ட நீதிபதி அய்ஷா ஆப்தீன் கட்டாய விடுமுறையில் அனுப்பட்டுள்ளார். சம்பளத்துடன் கூடிய கட்டாய விடுமுறையில் அவர் இவ்வாறு இன்று முதல் அனுப்பட்டுள்ளதாகவும், அவருக்கு எதிராக சிறப்பு விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளதாகவும் நீதிச்சேவை ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவித்தன.

 

பாராத லக்ஷமன் பிரேமசந்திர படுகொலை விவகாரத்தில் குர்றவாளிகளாக காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவையும் மேலும் சில சிரை கைதிகளையும் வெலிக்கடை சிரையில் சட்டத்துக்கு புறம்பான முறையில் சந்தித்ததாக அய்ஷா ஆப்தீன் மீது இணைய ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் ஊடாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் அவை குறித்து விசாரணைகளை தற்போது ஆரம்பித்துள்ள நீதிச்சேவை ஆணைக்குழு, மாவட்ட நீதிபதி ஆய்ஷா ஆப்தீனை சம்பளத்துடன் கூடிய கட்டாய விடுமுறையில் அனுப்பியுள்ளது.

Related posts

நாகப்பட்டினம் – காங்கேசன் துறை கப்பல் போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்

Editor

பேரீச்சம் பழத்திற்கு புதிதாக எந்த வரியும் கிடையாது! முஜீபுர் றஹ்மான் பா.உ

wpengine

பொருளாதார மையம் தேக்கவத்தையில்;ஹரிசன்,றிசாத், முதலமைச்சரின் செயலாளர் முடிவு

wpengine