பிரதான செய்திகள்விளையாட்டு

நியூஸிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இங்கிலாந்து

உலகக் கிண்ண 20க்கு இருபது போட்டிகளில், நேற்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதின.

இந்தியாவின் டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

எனவே, களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 20 ஓவர்கள் நிறைவில், 8 விக்கெட்டுக்களை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றது.

இதன்படி 154 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன், அடுத்ததாக இங்கிலாந்து களமிறங்கியது.

அந்த அணி சார்பில் அதிரடியாக ஆடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜோசன் ரோய் (Jason Roy) 78 ஓட்டங்களை குவித்தார்.

அவரது அந்த சிறப்பான துடுப்பாட்டத்தின் உதவியுடன் அந்த அணி, 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து, 159 ஓட்டங்களை விளாசியது.

இதற்கமைய 7 விக்கெட்டுக்களால் இங்கிலாந்து அணி வெற்றி வாகை சூடியுள்ளது.

எனவே உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு அந்த அணி தகுதி பெற்றுள்ளது.

இதேவேளை நாளை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இதில் வெற்றி பெறும் அணி ஏப்ரல் 3ம் திகதி கல்கத்தாவில் இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் வீழ்ச்சி, உற்பத்தியாளர்கள் சிரமம் .!

Maash

அமைச்ச ரிஷாட்டின் பெயரைப்பயன்படுத்தி கண்டி ஊர்வலத்திற்கு ஆட்சேர்க்க நடவடிக்கை.

wpengine

மட்டு,மாவட்டத்தில் கடமை நிறைவேற்று அதிபர்களை சேவை அடிப்படையில் நிரந்தரமாக்கவும் -அமீர் அலி

wpengine