பிரதான செய்திகள்

நியமனக் கடிதங்களை வழங்கிய வட மாகாண ஆளுநர்

வடமாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட பரீட்சையில் சித்தி பெற்று நேர்முகத் தேர்வில் தெரிவாகியவர்களுக்கான நியமனக் கடிதங்களை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே வழங்கி வைத்துள்ளார்.

யாழ். மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றுள்ளது.

முகாமைத்துவ உதவியாளர்கள், விவசாய போதனாசிரியர்கள், பயிற்சியாளர்கள், கடல்நீர் வளத்துறை போதனா ஆசிரியர்கள் என மொத்தம் 82 பேருக்கான நியமனக் கடிதங்களை ஆளுநர் வழங்கி வைத்துள்ளார்.

இதில் ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், உதவிச் செயலாளர் ஏ.எக்ஸ் செல்வநாயகம், விவசாய அமைச்சின் செயலாளர் க.தெய்வேந்திரம், பதில் பிரதம செயலாளர் சரஸ்வதி மோகனதாஸ், இ.வரதீஸ்வரன் மாகாண சபை செயலாளர், ரூபினி வரதலிங்கம் மகளீர் விவசாய அமைச்சு, வடமாகாண திணைக்கள ஆணையாளர்கள் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

அரசு சரியான மருத்துவ உபகரணங்களை வழங்காமையேபேராதனை யுவதியின் மரணத்திற்கு காரணம்! -தாதியர் சங்க பொதுச் செயலாளர்-

Editor

பிலிப்பைன்சில் 5.4 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்!

Editor

வவுனியா ஒருங்கிணைப்பு கூட்டம்! முஸ்லிம் இணைக்குழு தலைவர்கள் கலந்துகொள்ள வில்லை

wpengine