பிரதான செய்திகள்

நாளை கல்முனை ஜாமியா மன்பயில் ஹிதாயாவின் பட்டமளிப்பு விழா

(எம்.எஸ்.எம். ஸாகிர்)

கல்முனை ஜாமியா மன்பயில் ஹிதாயா அரபுக் கல்லூயின் 11ஆவது மௌலவி ஆலிம் பட்டமளிப்பு விழா மற்றும்12ஆவது தலைப்பாகை சூட்டும் விழா மற்றும் ஜவாதுல் ஜாமிஆ எச்.எம்.பீ. முகைதீன் ஹாஜியார் மண்டப திறப்பு விழா ஆகிய நிகழ்வுகள் நாளை மறுதினம் (17) புதன்கிழமை காலை 9.00 மணிக்கு கல்முனை ஜாமிஆ மன்பயில் ஹிதாயா அரபுக் கல்லூயின் கலாபீட கலாசார மண்டபத்தில் இடம்பெறும்.

கல்முனை ஜாமியா மன்பயில் ஹிதாயா அரபுக் கல்லூயின் கலாபீட அதிபர் மௌலவி பீ.எஸ். முஹம்மது அலி (அன்வாரி பாஸில் மளாஹிரி – இந்தியா) தலைமையில் கலாபீட ஆளுனர்சபைத்தலைவர் எஸ். எல். மீராசாஹிப் முன்னிலையில்  இடம்பெறும் இவ்விழாவில், கலாபீட மாணவர்கள், பெற்றோர்கள்,  ஊர்ப்பிரமுகர்கள், புத்திஜீவிகள், உலமாக்கள் எனப்பலரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

Related posts

வவுனியாவில் 13வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை

wpengine

மன்னார் மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பணத்திற்கு கணக்கு இல்லை,நிர்வாகம் தெரியாது விசனம்

wpengine

யாழ்ப்பாணத்தில் 50 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி மஹிந்த

wpengine