செய்திகள்பிரதான செய்திகள்

நாடளாவியரீதியிலான விசேட சுற்றிவளைப்பில் 241 பேர் கைது.. !

நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 241 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம் (18) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த சந்தேகநபர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 92 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 75 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 70 பேரும், ஹேஷ் போதைப்பொருளுடன் ஒருவரும், குஷ் போதைப்பொருளுடன் 03 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு, 91 கிராம் 890 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 131 கிராம் 220 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 02 கிலோ 96 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 2 கிராம் ஹேஷ் போதைப்பொருளும், 05 கிராம் 248 மில்லிகிராம் குஷ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

ஏழை விவசாயிகளுக்கு காணி வழங்கக் கூடாது மன்னார் அரசாங்க அதிபர் தலைமை கூட்டத்தில்

wpengine

ஜனாதிபதிக்கு ரவூப் ஹக்கீம் காட்டிய துருப்புச் சீட்டு

wpengine

பலசரக்கு ஏற்றுமதி மூலம் வரலாற்றில் அதிகூடிய வருமானம் இலங்கைக்கு

wpengine