பிரதான செய்திகள்

நகராட்சி தேர்தலில் தாயீப் எர்டோகன் அமோக வெற்றி

துருக்கியில் இடம்பெற்ற நகராட்சி தேர்தலில் ஜனாதிபதி தாயீப் எர்டோகன் தலைமையிலான கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது.
துருக்கியில் 24 மாகாணங்களுக்கு உட்பட்ட மாவட்டங்களில் உள்ள நகராட்சிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்தநிலையில், தனது கட்சி 778 நகராட்சிகளில் வெற்றி பெற்றதாக ஜனாதிபதி எர்டோகன் அறிவித்தார்.

தனது கட்சியை, தொடர்ந்து 15வது முறையாக வெற்றி பெறச்செய்ததற்காக மக்களுக்கு அவர் தமது நன்றியை தெரிவித்தார்.

இந்த வெற்றியை தொடர்ந்து நாட்டில் பொருளாதார சீர்திருத்தம் கொண்டுவரப்படும் என அவர் உறுதியளித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

முஸ்லிம் ஆசிரியர்கள் விடயத்தில் பொய் சொல்லும் மனோ அமைச்சர்

wpengine

லங்கா IOC நிறுவனமும் எரிபொருட்களின் விலைகளை குறைத்தது!

Editor

அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்த முன்னால் அமைச்சர் றிஷாட்

wpengine