பிரதான செய்திகள்

தேய்ந்த டயர்களை தேடுதல் வேட்டையினை நிறுத்திய அமைச்சர்

தேய்ந்த டயர்களை தேடுதல் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதென அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ₹ரம்புக்வெல தெரிவித்தார்.

கடந்த 20ஆம் திகதியன்று லுணுகலை-கொழும்பு பிரதான வீதியில் 30ஆம் கட்டையில் தனி​யார் பஸ்ஸொன்று சுமார் 250 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

அதில், 14 பேர் மரணமடைந்தனர், 35 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து, தேய்ந்த டயர்களை தேடும் நடவடிக்கைகளை பொலிஸார் முடுக்கிவிட்டிருந்தனர்.

டயர்கள் தேய்ந்திருந்தால் தண்டமும் அறவிடப்பட்டிருந்தது. எனினும், அச்செயற்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர் அறிவித்தார்

Related posts

உயர் கல்வியின்றி ஒரு இலட்சம் மாணவர்கள் நிர்க்கதி!

Editor

சமூகவலைத்தள போலி பிரச்சாரம்! சட்டத்தரணி அலி சப்ரி நடவடிக்கை

wpengine

கட்டாருடன் பொருளாதார உறவை மேம்படுத்த இலங்கை நாட்டம் றிஷாட்

wpengine